போலந்தில் ஏவுகணை வீசியதா ரஷ்யா? : அவசர கூட்டத்தை கூட்டிய பைடன் - என்ன நடந்தது? டிவிட்டர்
உலகம்

போலந்தில் வெடித்த ரஷ்ய ஏவுகணை; உலகநாடுகள் பதற்றம் - நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

Antony Ajay R

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 9 மாதங்களில் பல முறை அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளார் ரஷ்ய அதிபர் புதின். இந்த நிலையில் ரஷ்ய ஏவுகணை போலந்தில் விழுந்ததாக எழுந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த ஏவுகணை விழுந்ததில் போலந்து குடிமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

நேட்டோ உறுப்பினரான போலந்து நாட்டின் கிழக்கு மாகாணம் லுபெல்ஸ்கியில் உக்ரைன் எல்லைப் புறமாக உள்ள கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ரஷ்யாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

1. மறுக்கும் ரஷ்யா

ஆனால் ரஷ்யா இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. உக்ரைன் - போலந்து எல்லை மண்டலத்தை குறிவைத்து ரஷ்ய ராணுவம் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறிவருகிறது.

2. G7, NATO அவசர கூட்டம்

ரஷ்ய தயாரிப்பு ஏவுகணைகளால் தங்கள் நாட்டவர் உயிரிழந்திருப்பதாக போலந்து கூறிய உடனே ஜி7 மற்றும் நேட்டோ நாட்டுத் தலைவர்களுடன் அவரச ஆலோசனை நடத்தினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இப்போது ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களும் இந்தோனேசியாவில் கூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

3. G20 மாநாடு

முன்னதாக ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதை ரஷ்ய அதிபர் புதின் தவிர்த்துவிட்டார். ரஷ்யாவின் அணு ஆயுதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பாராட்டுவதாக சீன அதிபர் கூறினார். மேலும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான் விவகாரத்தை "போர்" எனக் குறிப்பிடக் கூடாது என்றும் சீனா கூறியுள்ளது.

4. முழுமையான விசாரணை

"இது ரஷ்யாவால் ஏவப்பட்டதாக பூர்வாங்க தகவல்கள் கூறினாலும் முழுமையான விசாரணை நடந்து முடியும் வரை நான் எதையும் கூறப்போவதில்லை" என்று பைடன் கூறியுள்ளார். இதுவரையில் அந்த ஏவுகணை ரஷ்யாவிடமிருந்து ஏவப்பட்டதாக உறுதிப்படுத்த முடியவில்லை. ரஷ்யாவும் இதனை மறுத்துள்ளது.

5. பதற்றத்தை குறைக்க கோரிக்கை

உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியது முதல் மூன்றாவது நாடுகள் பங்கேற்கவில்லை. ஆனால் இப்போது ரஷ்ய ஏவுகணை போலந்தை தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தியதில் பதற்றத்தை குறைக்க வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்துள்ளன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?