Kailasa: நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு பிரதமராக பொறுப்பேற்ற நடிகை ரஞ்சிதா? Linkedin
உலகம்

Kailasa: நித்தியானந்தாவின் கைலாசா நாட்டுக்கு பிரதமராக பொறுப்பேற்ற நடிகை ரஞ்சிதா?

Keerthanaa R

கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் நித்தியானந்தா. இரண்டு முறையும் ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்.

நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் பல அவ்வப்போது எழுந்தபோதிலும், அதனை பற்றி கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார்.

அதன் பிறகு சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்திருந்தார்.

கைலாசாவுக்கு என்று தனி பாஸ்போர்ட், தனி ரூபாய் நோட்டுகள் காயின்கள் எல்லாம் தயாரிக்கப்பட்டன.

நித்தியானந்தா நேரலை நிகழ்ச்சிகள் மூலமாக தோன்றி அவரது பின் தொடர்பவர்களுக்கு சொற்பொழிவுகள் ஆற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இவரது கருத்துகள் இணையத்தில் மீம் டெம்பிளேட்டுகளாகவும் மாறியது தவிர்க்கமுடியாதது.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்க, சில தினங்களுக்கு முன்னர் ஐ நா வில் கைலாசா சார்பில் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். தங்களது நாட்டின் சார்பில் சில கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். மேலும், அவர்களது தலைவர் நித்தியானந்தா குறித்து பலரும் அவதூறு பரப்புவதாகவும் அவர்கள் பேசியிருந்தனர்

இந்நிலையில், தற்போது கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைலாசாவின் இணையதள பக்கத்தில் நடிகை ரஞ்சிதாவின் ஃபோட்டோ ஒன்றி பகிரப்பட்டு அதில் அவரது பெயர் நித்யானந்தா மாயி சுவாமி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது இந்த பெயருக்கு கீழ் கைலாசாவின் பிரதமர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படமும், நடிகை ரஞ்சிதா பிரதமரானார் என்ற செய்தியும் இணையத்தில் காட்டு தீயாக பரவி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக நித்தியானந்தாவின் பெயர் சர்ச்சையில் சிக்கியபோது நடிகை ரஞ்சிதாவின் பெயரும் உடன் வந்தது. நித்தியானந்தாவுடன் இவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகின.

அவற்றையெல்லாம் இருவருமே மறுத்த நிலையில் நித்தியானந்தா நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ரஞ்சிதா தொடர்ந்து பங்கேற்று தான் வந்தார். நீண்ட நாட்களாகவே நித்தியானந்தாவின் சிஷ்யையாகவே ரஞ்சிதா இருந்துவருவதால், அவருக்கு கைலாசா நாட்டின் பிரதமர் பதவியை வழங்கியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கைலாசா என்ற நாடே உண்மையா இல்லையா என்று விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்நாட்டிற்கு ஒருவர் பிரதமர் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?