Putin: ”எங்கள் கணவர்களை விட்டுவிடுங்கள்” கதறும் ரஷ்ய பெண்கள்; கண்டுகொள்ளாத புதின் அரசு
Putin: ”எங்கள் கணவர்களை விட்டுவிடுங்கள்” கதறும் ரஷ்ய பெண்கள்; கண்டுகொள்ளாத புதின் அரசு  Twitter
உலகம்

Putin: ”எங்கள் கணவர்களை விட்டுவிடுங்கள்” கதறும் ரஷ்ய பெண்கள்; கண்டுகொள்ளாத புதின் அரசு

Keerthanaa R

போதிய பயிற்சி அளிக்காமல் தங்கள் குடும்பத்தின் ஆண்களை ரஷ்ய படையில் சேருமாறு புதின் அரசு வற்புறுத்துவதாக ரஷ்யா நாட்டு பெண்கள் கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளனர். “எங்கள் குடும்பத்தினரை படுகொலைக்கு இட்டு செல்லவேண்டாம்” எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது. ஒராண்டைக் கடந்தும் போர் இன்னும் நிறைவுபெறாமல் நீண்டுக்கொண்டிருக்கிறது.

இரு தரப்பிலிருந்தும் பலி எண்ணிக்கைகள் அதிகமாகவே இருக்கின்றன. ரஷ்யாவுக்கு எதிராக போராட யுத்தத்தின் தொடக்கம் முதலே உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உள்பட நாட்டின் ஆண்கள், பெண்கள் என வயது வேறுபாடு இல்லாமல் களமிறங்கியிருந்தனர்

உக்ரைனை தொடர்ந்து ரஷ்யாவும் இந்த முறையை பின்பற்ற தொடங்கியது. ஆனால், நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் அனைவரும் நிச்சயமாக போர் புரியவேண்டும் எனவும் அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் புதின் தலைமையிலான ரஷ்ய அரசு தெரிவித்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த உத்தரவை ஏற்க அந்நாட்டு ஆண்கள் பலரும் தயாராக இல்லை.

இந்நிலையில், தங்களது குடும்பத்து ஆண்களை போரில் பங்கேற்குமாறு புதின் அரசு வற்புறுத்துவதாகவும், முறையான பயிற்சிகள் கூட வழங்காமல் “படுகொலை”க்கு தள்ளுவதாகவும் ரஷ்ய பெண்கள், தாய்மார்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த முறை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

சி என் என் செய்தி தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் சுதந்திர டெலிகிராம் சேனலான சோலோவில் வெளியான வீடியோவில், மார்ச் மாத தொடக்கம் முதல் அவர்களது அன்பிற்குரியவர்களை ’படுகொலை குழுவில்’ சேர ரஷ்யா வற்புறுத்தி வருவதாக அந்நாட்டு பெண்கள் கூறியுள்ளனர்.

மேலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இப்படை தனது வேலைகளை தொடங்கிய போதிலும், வெறும் நான்கு நாட்கள் தான் வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

“ஆடுகளை பலிகொடுப்பது போல 100 பேருக்கு எதிராக 5 பேரை அனுப்புகின்றனர். அதில் எனது கணவரும் ஒருவர்” என ரஷ்ய பெண் ஒருவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார்

தங்கள் நாட்டிற்காக போராட அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், முறையாக ராணுவ வீரர்களுக்கு அளிப்பது போன்று பெரும் தாக்குதல்களை எதிர்கொள்ள போதிய ஆயுதங்கள் இல்லை.

அதனால், அவர்களை திரும்ப அழைத்து ராணுவ வீரர்களுக்கு கொடுப்பது போல தேவையான பீரங்கிகள், மற்ற ஆயுதங்களை கொடுத்து அனுப்புங்கள் என அப்பெண்கள் கேட்டிருக்கின்றனர்

ரஷ்ய அரசின் வற்புறுத்தலால், நாட்டின் பல இளைஞர்கள், அவர்களையும் உக்ரைனுக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற பயத்தில் தப்பி ஓடுகின்றனராம். ”நாங்கள் வாழ விரும்புகிறோம்” என இளைஞர்கள் மன்றாடுகின்றனர்.

முறையற்ற பயிற்சிகள் மட்டுமல்லாது, சுகாதாரமற்ற உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை, சரியான தலைமையின்மை போன்றவைகளும், இந்த குழுவில் இளைஞர்கள் சேராமல் இருக்க முக்கிய காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?