Sealand: நடுக்கடலில் இருக்கும் உலகின் மிக சிறிய நாடு பற்றி தெரியுமா? மக்கள் தொகை 3 தான்! Twitter
உலகம்

Sealand: நடுக்கடலில் இருக்கும் உலகின் மிக சிறிய நாடு பற்றி தெரியுமா? மக்கள் தொகை 3 தான்!

Antony Ajay R

உலகின் மிக சிறிய நாடு எது தெரியுமா? யாருக்குதான் தெரியாது வாட்டிகன் சிட்டி எனக் கூறுவீர்கள். ஆனால் வாட்டிகன் சிட்டியை விட சிறிய நாடு ஒன்றறைதான் இந்த பதிவில் பார்க்கப்போகிறீர்கள்.

சீலாண்ட் என்பது தான் அந்த நாடு. இங்கிலாந்தில் இருந்து 10.4 கிலோ மீட்டர் கடலுக்குள் இருக்கிறது.

1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மன் படைகளிடம் இருந்த தங்களைக் காப்பாற்றுவதற்காக இங்கிலாந்தால் கட்டப்பட்டது தான் இந்த தளம்.

1967ம் ஆண்டு இங்கிலாந்தில் முன்னாள் இராணுவ வீரர் ராய் பேட்ஸ் என்பவர் ஒரு ரேடியோவைத் தொடங்க நினைத்தார்.

ஆனால் பிபிசி தவிர மற்றொரு ரேடியோவைத் தொடங்குவது சட்ட விரோதமாக பார்க்கப்பட்டதால அவர் இந்த கைவிடப்பட்ட இராணுவ தளத்துக்கு வந்தார்.

இங்கு அவர் ஒரு ரேடியோ ஸ்டேஷனுக்கு பதிலாக ஒரு நாட்டையே உருவாக்கினார். இந்த இடத்துக்கு சீலாண்ட் எனப் பெயர் வைத்து இதனைத் தனி நாடாக அறிவித்தார்.



இந்தற்காக பாஸ்போர்ட், ஸ்டாம்ப் ஆகியவற்றை வடிவமைத்தார். மேலும் தனியான கரன்சி, கொடி மற்றும் அரசு இருந்தாலும் சீலாண்ட் இறையாண்மை கொண்ட தனி நாடு எனக் கூறிவிட முடியாது.

இங்கிலாந்தோ அல்லது வேறெந்த நாடோ சீலாண்டை அங்கீகரிக்கவில்லை. 1978ம் ஆண்டு டச்சு இராணுவ அதிகாரிகள் சீலாண்டை கைப்பற்ற நினைத்தனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.

1990ம் ஆண்டு பிரிட்டீஷ் காவல்துறையினர் சீலாண்டை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் ராய் பேட்ஸின் மகனான மைக்கெல்லை கைது செய்தனர்.

இப்படி பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் சீலாண்டுக்கு சுற்றுலாப்பயணிகள் சென்று வருகின்றனர்.



நாட்டின் சர்வதேச எல்லைக்கு வெளியில் இப்படி தனியாக இருக்கும் தளம் எப்படியும் குற்றவாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும் என உங்களுக்கு தோன்றியிருக்கலாம்.

அரசாங்க வெப்சைடை தாக்கும் ஹேக்கர்களும், கடல் கொள்ளைக்காரர்களும் இதனை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வந்தன. ஆனால் சீலாண்ட் அரசு இவற்றை மறுத்துள்ளது.

அது என்ன சீலாண்ட் அரசு என நீங்கள் கேட்களாம். ராய் பேட்ஸின் இரண்டு மகன்கள் தான் அது. அவர்கள் இருவரும் இப்போது இளவரசர்களாக இருந்து அங்கு வசிக்கின்றனர்.

அவர்களுக்குன் பாடிகார்டாக ஒருவர் அங்கு வசிக்கிறார். ஆம், இந்த நாட்டில் மக்கள் தொகை 3.

சீலாண்டின் எதிர்காலம் என்ன?

சீலாண்டின் இளவரசர்கள் இருவரும் தங்கள் நாடு அங்கீகரிக்கப்படும் என நினைக்கின்றனர். ஒரு வேளை இந்த பகுதி மீண்டும் கைவிடப்படலாம். அல்லது கடல் சீற்றத்தில் இடிந்து போகலாம்.

இளவரசர்கள் அங்கு அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கலாம் என நினைக்கின்றனர். மேலும் சில டிஜிட்டல் குடிமக்களை அமைக்கலாம் என்றும் டிஜிட்டல் கரன்சியை வெளியிடலாம் என்றும் திட்டமிட்டுள்ளனர்.

சீலாண்ட் சர்வதேச எல்லைக்கு அப்பால் இருப்பதனால் இங்கிலாந்து அரசு இவர்களைக் கண்டுகொள்ளவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?