Bernard Arnault: அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் உலகின் No.1 பணக்காரர் - எப்படி தெரியுமா?
Bernard Arnault: அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் உலகின் No.1 பணக்காரர் - எப்படி தெரியுமா? Twitter
பிசினஸ்

Bernard Arnault: அடுத்த வாரிசை தேர்ந்தெடுக்கும் உலகின் No.1 பணக்காரர் - எப்படி தெரியுமா?

Antony Ajay R

இப்போது உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருப்பவர் பெர்னார்ட் அர்னால்ட். இவர் லூயி வுட்டான் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கிறார்.

74 வயதாகும் அர்னால்ட், இவருக்கு பின்னால் நிறுவனத்தைத் திறம்பட வழிநடத்தப்போவது யார் என கவலைகொள்ளத் தொடங்கியுள்ளார்.

இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் யாருடைய கைகளில் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை அளிக்கலாம் எனத் தெரிந்துகொள்ள அவர் ஒரு மாதத்தில் தனது 5 பிள்ளைகளையும் தனித்தனியாக அழைத்து விருந்தளித்து நேர்காணல் செய்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தளம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகில் பணத்தின் ஆட்சி நடக்கும் இன்றைய காலத்தில் ஒரு பெருநிறுவனத்தின் தலைமை என்பது ஒரு ராஜாங்கத்தை ஆளுவதைப் போன்றது.

அர்னால்ட் தனது குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் 90 நிமிடங்கள் செலவழித்து நேர்காணல் செய்தாராம். அப்போது நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து விசாரித்திருக்கிறார். மேலும் நிறுவனத்தில் தற்போது தேவையான மாற்றங்களையும் நிலவரங்களையும் கேட்டுள்ளார்.

இந்த நேர்காணல்கள் மூலம் தனது ராஜ்ஜியத்தின் தலைவராக அடுத்தது முடிசூடப்போவது யார்? என அர்னால்ட் முடிவு செய்யவுள்ளாராம்.

இதுவரை தனது 5 பிள்ளைகளில் யாருக்கு அந்த தகுதி இருக்கிறது என்பதை அவர் கூறவில்லை.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியுள்ளதன்படி, தனது வாரிசுகளில் ஒருவர் தான் தன் மறைவுக்கு பிறகு நிறுவனத்தை வழிநடத்த வேண்டும் என்பதில் அர்னால்ட் நீண்டகாலமாக உறுதியாக இருக்கிறார். இதனை வலியுறுத்தி முன்னதாக சில கூட்டங்களையும் நடத்தியிருக்கிறார்.

பெர்னார்ட் அர்னால்டின் சொத்து மதிப்பு 24,320 கோடி அமெரிக்க டாலர்கள். எலான் மஸ்கை வீழ்த்தி உலகின் மிகப் பெரிய பணக்காரராக திகழ்கிறார் அர்னால்ட்.

நிறைய லக்சரி பிராண்ட்களை வைத்துள்ளார் அர்னால்ட். அதாவது அமேசானின் ஜெஃப் பெசோஸ் போன்றோ எலான் மஸ்க் போன்றோ எல்லா மக்களுக்கும் இல்லாமல், லூயி வுட்டான், பல்கேரி, டிஃப்பனி, செபோரா, TAG ஹியூயர் மற்றும் டோம் பெரிக்னான் ஷாம்பெயின் உள்ளிட்ட பிராண்ட்கள் மூலம் பணக்காரர்களுக்கு பொருட்களை விற்கிறது இவரது நிறுவனம்.

பெர்னார்ட் அர்னால்டின் பிள்ளைகள்

அர்னால்டுக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள். மூத்த மகள் டெல்ஃபின், இவர் லூயி வுட்டானின் இரண்டாவது பெரிய பிராண்டான கிறிஸ்டியன் டியருக்கு தலைமை வகிக்கிறார்.

இரண்டாவது அலெக்ஸாண்டரே இவர் முக்கியமான பிராண்டில் நிர்வாகியாக இருக்கிறார். 3வது மகனான ஃபிரெடரிக் TAG ஹியூயர் பிராண்டின் சிஇஓ-வாக இருக்கிறார்.

4வது மகன் ஜீன் லூயி விட்டானின் மார்கெட்டிங் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டுக்கு பொறுப்பாக இருக்கிறார். கடைசி மகனான அண்டோயின் ஹோல்டிங் நிறுவனத்தை நிர்வகிக்கிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

2500 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் திசை மாறிய கங்கை நதி - ஆய்வு சொல்வதென்ன?

Nikhila vimal: அழகிய லைலா நிகிலா விமலின் ரீசண்ட் புகைப்படங்கள்!

3.5 ஆண்டுகள் வரை கர்ப்ப காலம் கொள்ளும் விலங்குகள் பற்றி தெரியுமா?

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?