துவாரகா முதல் வாரணாசி வரை - புராணங்களில் இடம்பெற்ற இந்திய நகரங்கள்
துவாரகா முதல் வாரணாசி வரை - புராணங்களில் இடம்பெற்ற இந்திய நகரங்கள் ட்விட்டர்
இந்தியா

துவாரகா முதல் வாரணாசி வரை - புராணங்களில் இடம்பெற்ற இந்திய நகரங்கள்

Keerthanaa R

இந்தியாவின் வரலாறு நீண்டதாக உள்ளது. இந்த வரலாற்றின் அடிப்படையில், பல கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் இருந்ததை நாம் அறிகிறோம்.

கலாச்சாரங்கள் என்று குறிப்பிடுகையில், இதிகாசங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இப்போது நாடு பிரிந்திருந்தாலும், இதிகாசங்களின்படி, இவை முன்பு ஒன்றாக இருந்தன. அப்போது நிறைய நகரங்களும் இருந்தன.

இந்த நகரங்களில் சில இன்றும் இருக்கின்றன, ஒரு சில நகரங்கள் அழிந்து போயிவிட்டன. அவற்றை குறித்து இங்கு காணலாம்

துவாரகா

மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் இந்த நகரமானது கடலுக்குள் மூழ்கிவிட்டதாக நம்பபடுகிறது. இது இந்தியாவின் புனித தலங்களுள் ஒன்றாகும்.

தற்போது இருக்கும் துவாரகா 7 வது நகரம் என்றும் மற்ற ஆறும் அரபிக்கடலின் கரையோரத்தில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கிமு 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இடிபாடுகளை மீட்டெடுப்பதில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.

அயோத்தியா

ராமாயணத்தின் ராமரின் பிறப்பிடமான இந்த நகரம், இந்தியாவின் புனித தலங்களுள் ஒன்று. வனவாசம் முடிந்து ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளை இங்குள்ளவர்கள் ஆண்டாண்டு காலமாக தீபாவளியாக கொண்டாடி வருகின்றனர்.

இங்கு 4 நாட்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது

ஹஸ்தினாபுரம்

மகாபாரதத்தின்படி, இந்த நகரம் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் பிறப்பிடமாக, தலைநகரமாக விளங்கியது. தற்போது உத்தரபிரதேசத்தின் கீழ் இருக்கும் இந்த நகரத்தின் மிச்சங்கள், பண்டைய காலத்து அரசியல் மற்றும் மூலோபாயத்தின் ( strategy) சான்றாக உள்ளது.

இந்திரபிரஸ்தம்

மகாபாரத கதைகளின் படி, பாண்டவர்களின் தலைநகரமாக இது விளங்கியது. அதாவது, திரௌபதியை ஐவரும் திருமணம் செய்த பிறகு ராஜ்ஜியம் பிரிக்கப்பட்டபோது இந்த நகரம் பாண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

தற்போது இந்த நகரம் தலைநகர் டெல்லியில் உள்ளது.

வாரணாசி

இந்தியாவின் பிரதானமான புனித தலம் என்றால் அது வாரணாசி தான். இதனை காசி என்றும் அழைக்கின்றனர். இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்றான காசி அதன் கலாச்சார பின்னணிக்காக போற்றப்படுகிறது.

இந்துக்கள் இந்த நகரத்திற்கு வந்து கங்கையில் புனித நீராடுவதை வாழ்வின் முக்கிய அங்கமாக நம்புகின்றனர்.

குருக்‌ஷேத்திரா

புராணங்களின்படி, இங்கு தான் மகாபாரதத்தின் குருக்‌ஷேத்திர யுத்தம் நடைபெற்றது. இந்த இடம் தற்போது ஹரியானாவின் எல்லைகளுக்குள் வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?