ஃபேஸ்புக் Twitter
இந்தியா

Facebook மூலம் ஆபாச வீடியோ கால் - 7.5 லட்சம் கேட்டு மிரட்டிய போலீஸ்?

Antony Ajay R

மும்பையைச் சேர்ந்த 43 வயதாகும் நபர் தான் டெல்லி காவல்துறை மற்றும் ஒரு பெண்ணால் 7.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டப்பட்டதாக காவல்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

அவருக்கு இந்த பிரச்னைகள் முதன் முறையாக பேஸ்புக் மூலம் வந்திருக்கின்றன. ஜூலை 13ம் தேதி அன்கிதா ஷர்மா என்ற பெயரில் வந்த நட்பு அழைப்பை அவர் ஏற்றிருக்கிறார்.

ஃபேஸ்புக் மூலம் வந்த ஆபாச வீடியோ கால்

நட்பு அழைப்பை ஏற்று பழகிய சில காலத்திலே அந்த பெண்ணிடம் இருந்து வீடியோ கால் வந்திருக்கிறது. அதனை அட்டன் செய்து பேசும் போது அந்த பெண் தனது ஆடைகளை களையத்துவங்கியிருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நபர் காலை கட் செய்துள்ளார்.

ஆனால் மீண்டும் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் கால் வந்த வண்ணம் இருந்திருக்கிறது.

காலில் மீண்டும் ஆடைகளை களைந்த பெண் இந்த நபரின் ஆடைகளையும் களையக் கூறியிருக்கிறார்.

Facebook

பணம் கேட்டு மிரட்டியப் பெண்

இதன் பின்னர் அந்த பெண் வீடியோகாலை ரெக்கார்ட் செய்து வைத்திருப்பதாகவும், அதனை சமுக வலைத்தளங்களில் பதிவிடாமல் இருக்க 15,000 ரூபாய் கொடுக்கும் படியும் கேட்டுள்ளார்.

இந்த பணத்தையும் கொடுத்த அவர், பெண்ணின் போன் நம்பர் மற்றும் பேஸ்புக் ஐடியை பிளாக் செய்திருக்கிறார்.

பணம் கேட்ட டெல்லி போலீஸ்

இதன் பின்னர் ஜூலை 18ம் தேதி அந்த நபருக்கு ஒரு கால் வந்திருக்கிறது,

அதில் தன் பெயர் அருண் சக்சேனா என்றும் தான் ஒரு டெல்லி சைபர் காவல் அதிகாரி என்றும் பேசிய நபர், "உங்களது வீடியோ சமுக வலைத்தளத்தில் பரவியிருக்கிறது. அதனை நீக்க நான் சொல்லும் நபரைத் தொடர்பு கொள்ளுங்கள்" எனக் கூறி ஒரு எண்ணைக் கொடுத்திருக்கிறார்.

அந்த எண்ணில் பேசிய மூன்றாவது நபர் வீடியோக்களை நீக்க 2.5 லட்சம் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.

FIR -லிருந்து பெயரை நீக்க பணம்

சில நாட்களில் மீண்டும் அந்த நபரைத் தொடர்பு கொண்ட அருண் சக்சேனா, அந்த பெண் தனது ஆபாச வீடியோ வெளியானதால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறியுள்ளார். அந்த பெண் இறந்தது போன்ற புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறார்.

அத்துடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் இவரது பெயரை FIR -லிருந்து நீக்க 5 லட்சம் பணம் கேட்பதாகவும் கூறியிருக்கிறார்.

அச்சமடைந்த நபர் அருண் கேட்ட மொத்த பணத்தையும் 3 தவணையாக கொடுத்திருக்கிறார்.

மொத்தமாக 7.5 லட்சம் பணத்தை ஜூலை 15 - 18க்கு இடையில் அந்த நபர் கொடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இதனைத் தாண்டியும் பணம் கேட்டு மிரட்டியதால் அந்த நபர் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?