இந்திய ரயில் நிலையங்களுக்கு சாலை என்று பெயர் வைக்க இதான் காரணமா? அடடே தகவல் Twitter
இந்தியா

இந்திய ரயில் நிலையங்களுக்கு சாலை என்று பெயர் வைக்க இதான் காரணமா? அடடே தகவல்

Priyadharshini R

பொதுவாக ரயில் செல்லும் இரும்பு பாதையை தண்டவாளம் என்று கூறுவோம். ரயில் நிற்கும் இடங்களை ரயில் நிலையங்கள் என்று சொல்வோம்.

அதுவே பல திசைகளில் செல்லும் ரயில் பாதைகள் சந்திக்கும் இடத்தை ரயில் சந்திப்பு அல்லது ஜங்க்ஷன் என்று அழைப்பது வழக்கம்

வட இந்தியாவில் பல ரயில் நிலையங்களின் பெயர்கள் வித்தியாசமானதாக இருக்கும். பேட்டியா ( மகள்), நானா (அப்பா), பிபிநகர் (பிபி -மனைவி ) போன்று இருக்கும்.

அதே போல நாட்டில் பல ரயில் நிலையங்கள் அவற்றின் பெயர்களுக்குப் பின்னால் ரோடு ( சாலை) என்ற வார்த்தையை பயன்படுத்திருப்பதை பார்த்திருக்கலாம்.

அப்படி பயன்படுத்தும் நகரின் பெயருக்கு பின்னால் சாலை என்ற வார்த்தையே இல்லை ஆனால் பெயர் பலகையில் அந்த பெயர் உள்ளது. எதற்காக சாலை என்ற வார்த்தையை இந்தியன் ரயில்வே பயன்படுத்துகிறது. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ரோடு என்று பெயரிடப்பட்ட ரயில் நிலையம் உண்மையில் அதன் நகரத்திலிருந்து விலகி உள்ளது.

அதாவது இந்த ரயில் நிலையம் மற்ற ரயில் நிலையங்களைப்போல் ஊருக்கு நடுவில் இல்லாமல் ஊரை விட்டு வெளியில் ஒதுக்கு புறமாக உள்ளது.

இந்த ரயில் நிலையத்திற்கே சாலை வழியாக தான் வரவேண்டும் என்பது தான் அதன் குறியீடாக உள்ளது.

இது குறித்து இந்திய ரயில்வேயின் அதிகாரி கூறுகையில்

ரயில் நிலையத்துடன் 'சாலை' என்ற வார்த்தை இணைந்திருப்பது அந்த ரயில் நிலையத்திலிருந்து அந்த இடத்தை அடைய சாலையின் உதவியை பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

அந்த ஊருக்கு செல்லும் ரயில் பயணிகள் அந்த சாலை செல்லும் வழியில் உள்ள நிறுத்தத்தில் இறங்க வேண்டும்" என்று விளக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து அந்த நகரங்களுக்கான தூரம், 2 முதல் 100 கிமீ வரை இருக்கலாம்.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் அருகே உள்ள கொடைரோடு ரயில் நிலையம் கொடைக்கானல் நகரத்திற்கு 79 கிமீ தூரம் உள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் நகரம் ஹசாரிபாக் சாலை ரயில் நிலையத்திலிருந்து 66 கிலோமீட்டர் தொலைவிலும், ராஞ்சி நகரம் ராஞ்சி சாலை ரயில் நிலையத்திலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதேபோல், ஆபு ரோடு ரயில் நிலையம் ஆபுவிலிருந்து 27 கிமீ தொலைவிலும், ஜாங்கிபூர் நகரம் ஜாங்கிபூர் சாலை ரயில் நிலையத்திலிருந்து 7.5 கிமீ தொலைவிலும் உள்ளது.

இதுபோன்ற பல ரயில் நிலையங்களைச் சுற்றி ஏராளமான மக்கள் குடியேறத் தொடங்கியுள்ளனர். ஆனால், இந்த ரயில் நிலையங்கள் கட்டப்பட்டபோது, ​​அங்கு யாரும் வசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?