பெர்முடா முக்கோணம் தெரியும்; இந்தியாவின் தங்க முக்கோணம் பற்றி தெரியுமா?
பெர்முடா முக்கோணம் தெரியும்; இந்தியாவின் தங்க முக்கோணம் பற்றி தெரியுமா? Canva
இந்தியா

பெர்முடா முக்கோணம் தெரியும்; இந்தியாவின் தங்க முக்கோணம் பற்றி தெரியுமா?

Keerthanaa R

தலைப்பை பார்த்ததும், அமானுஷ்யமாக ஏதாவது இருக்கும் என்று நினைக்க வேண்டாம். இந்தியாவின் தங்க முக்கோணம், Golden Triangle பாதுகாப்பானது. அது மட்டுமல்லாமல் உங்களுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்கக்கூடியது.

பயணக்காதலர்களுக்கு இந்த தங்க முக்கோணம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இந்திய நகரங்களான டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூரை தான் இந்த முக்கோணத்தில் இணைக்கின்றனர்.

இந்த மூன்று நகரங்களில் சுற்றிப்பார்க்க எண்ணற்ற இடங்களும், இந்தியாவின் வரலாற்றை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சின்னக்களும் இருக்கின்றன.

டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூரை நாம் மேப்பில் பார்த்தால், முக்கோண வடிவம் தோன்றும். அதனாலேயே இந்த பெயர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், முதன் முறையாக இந்தியாவிற்கு வரும்போது இந்த மூன்று இடங்களுக்கு செல்ல தான் முதலில் விரும்புகின்றனர்.

சரி இந்த தங்க முக்கோணத்தில் என்னென்ன இடங்களை பார்க்கலாம்? இந்த பதிவில்...

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நாம் சுற்றிப்பார்க்க செங்கோட்டை, குதுப் மினார், இந்தியா கேட், ராஜ் காட், இரும்பு தூண் என எண்ணற்ற இடங்கள் இருக்கின்றன.

இந்தியாவின் பெருநகரங்கள் பலவற்றில் இருந்தும் டெல்லிக்கு நேரடி விமான சேவை இருக்கிறது. ரயில் பயணத்தையும் மேற்கொள்ளலாம்.

உங்களின் இந்த கோல்டன் ட்ரையேங்கிள் சுற்றுப்பயணத்தை டெல்லியில் இருந்து தொடங்குவது சிறப்பாக அமையும். இந்த நினைவுச் சின்னங்கள் மட்டும் இல்லாமல், தெருவோர சந்தைகள், ஸ்ட்ரீட் ஃபுட்கள், கிளப்களுக்கும் சென்று வரலாம்.

மூன்று நாட்கள் டெல்லியில் செலவழித்தால், முக்கிய இடங்களை ஒய்யாரமாக கண்டு ரசித்து வரலாம்.

ஆக்ரா

டெல்லியில் இருந்து அப்படியே சாலை மார்க்கமாக ஆக்ராவை அடையலாம். மூன்று மணி நேர பயணமாக இருக்கும். ஆக்ரா என்றால் என்ன நினைவுக்கு வரும்?

உலகின் 7 அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹால். தாஜ் மஹாலை தவிர, ஃபதேபூர் சீக்ரி, ஆக்ரா கோட்டை ஆகியவற்றையும் நீங்கள் கண்டு வரலாம்.

இங்கு தாஜ் மஹாலை பார்வையிட மட்டும் ஒரு முழு நாளை ஒதுக்குங்கள். மாலை மங்கும் நேரத்தில், அங்குள்ள தெருவோர மார்கெட்களில் ஷாப்பிங் செல்லலாம், வித விதமான உணவுகளை சுவைக்கலாம்.

ஜெய்ப்பூர்

ஆக்ராவுக்கு பிறகு உங்கள் அடுத்த டெஸ்டினேஷன் ஜெய்ப்பூர். பின்க் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது இந்த நகரம். இதன் வரலாறு சுவாரஸ்யமானது. ஜெய்ப்பூரைச் சுற்றிப்பார்க்க 3 நாட்கள் தேவைப்படுகிறது.

இங்கு ஆம்பர் கோட்டை, ஜல் மஹால், ஹவா மஹால், ஜைகர் உள்ளிட்ட கோட்டைகள் இருக்கின்றன.

இதை தவிர பாரம்பரிய ராஜஸ்தான் உணவுகள், பல வகையான இனிப்புகள் இங்கு கிடைக்கிறது. இங்கும் சந்தைகள் உள்ளன. ராஜஸ்தானை அடையாளப்படுத்தும் நிறைய பொருட்கள் இங்கு கிடைக்கும்.

இங்கிருந்து மீண்டும் உங்கள் பயணத்தை டெல்லிக்கு மேற்கொண்டு, ட்ரிப்பை முடிவுக்கு கொண்டு வரலாம். நேரம் இருந்தால் ஓல்ட் டெல்லி மற்றும் சவுத் டெல்லிக்கும் சென்று வாருங்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 170 ஆக உயர்வு!

உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான் - இந்தியாவின் இடம் என்ன?

சில ஆப்பிள்கள் ஏன் ஸ்டிக்கருடன் விற்கப்படுகின்றன தெரியுமா?

விழுப்புரம்: சாப்பாட்டில் ஊறுகாய் வைக்காத ஹோட்டலுக்கு அபராதம் விதித்த ஆணையம்!

நேபாள விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு!