"அறியாமையே எப்போதும் மாற்றத்தை கண்டு அஞ்சுகிறது" - நேருவின் 20 பொன்மொழிகள்! Twitter
இந்தியா

"அறியாமையே எப்போதும் மாற்றத்தை கண்டு அஞ்சுகிறது" - நேருவின் 20 பொன்மொழிகள்!

Antony Ajay R

இந்தியா என்ற குழந்தையை முதன்முதலாக கையில் ஏந்தியவர் நேரு. இவரது துணிவான நடவடிக்கைகளும் முயற்சிகளுமே இந்தியாவை நிலை நிறுத்தியது. தேசத்தின் மீது மிகுந்த அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்த நேரு எதிர்கால இந்தியாவை குறித்தே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

இதனால் "குழந்தைகள் தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கப் போகிறார்கள், அவர்களை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பது முக்கியமானது" எனப் பேசிவந்தார் நேரு. இதுவே அவரது பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடவும் காரணமாயிற்று. இந்த நாளில் அவர் கூரிய சில பொன்மொழிகளைக் காணலாம்.

  • கடப்பதற்கு தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்னைகளும் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பற்று போய்விடும்.

  • செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம்.

  • முயற்சியுடன் செயல்படுபவர்களையே வெற்றித் தழுவும்.

  • வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

  • சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழ்கின்ற மனிதன்.

  • விளைவுகளை வைத்து தான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.

  • உங்கள் உடல்நலனை எப்படி பாதுகாக்கின்றீர்களோ அதுபோல நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும்.

  • உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது.

  • ஒன்றை அடைவதற்கு தேவை நல்ல குணம், ஒழுக்கம், ஒருமித்த செயல், எதற்கும் தயாராக இருத்தல்.

  • அச்சம் போன்று மிக மோசமாக ஆபத்து எதுவுமில்லை!

  • துணிந்து செயல்படுபவர்கள் தான் அடிக்கடி வெற்றியின் சிகரத்தை எட்டுகிறார்கள்.

  • கழிந்ததை கணக்கெடுத்துக்கொண்டே இருந்தால், இருப்பதை காணாமல் தொலைத்துவிடுவாய்!

  • பிரச்னை இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்காது!

  • தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.

  • மிரட்டிப் பணியவைக்கும் எந்த செயலும் வெறுக்கத்தக்கதே!

  • முயற்சிகள் செய்துகொண்டிருப்பவர்களைத் தான் வெற்றிகள் தேடி வரும்.

  • அறியாமையே எப்போதும் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறது!

  • அழகும் சாகசமும் நிறைந்த அற்புதமான உலகில் வாழ்கிறோம். நமது கண்களைத் திறந்தால் மட்டுமே இவற்றைக் காண முடியும்.

  • உண்மையான நம்பிக்கை ஒருவனுக்கு இருக்குமாயின், அந்த நம்பிக்கை மலையைக் கூட அசைத்துவிடும்

  • உலக வரலாற்றைப் படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?