WPL 2023: சுமிருதி மந்தனா டு ஹர்மன் ப்ரீத் கவுர்- அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனைகள்? Twitter
ஸ்போர்ட்ஸ்

WPL 2023: ஸ்மிருதி மந்தனா டு ஹர்மன் ப்ரீத் கவுர்- அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீராங்கனைகள்?

Antony Ajay R

பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டிகளை இந்த ஆண்டு முதல் நடத்த உள்ளது பிசிசிஐ.

ஆண்களுக்காக நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகள் 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு பெருவெற்றி கண்ட தொடராக இருக்கிறது.

இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து பெரும் ரசிகர் பட்டாளம் ஐபிஎல் தொடரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான டபிள்யு.பி.எல் போட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளது பிசிசிஐ.

இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடர் அடுத்த மாதம் (மார்ச்) 4ஆம் தேதி தொடங்கி  26 ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் பங்கேற்கும்  வீராங்கனைகளை  தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று மும்பையில் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ சர்வதேச கூட்டரங்கில் தொடங்கியது. 

மொத்தம் 1,525 வீராங்கனைகள் பதிவு செய்திருந்த நிலையில் இறுதிப் பட்டியலில் 246 இந்தியர்கள், 163 வெளிநாட்டவர் என 409 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

5 அணிகளும் சேர்த்து 90 வீராங்கனைகளை தேர்வுசெய்யலாம் என்றும்  ஒவ்வொரு அணியும் ரூ.12 கோடி வரை செலவு செய்து 15 முதல் 18 வீராங்கனைகள் வரை எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இதுவரை அதிக விலைக்கு எடுக்கப்பட்டுள்ள வீராங்கனைகள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்...

ஸ்மிருதி மந்தனா - 3.4 கோடி

சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகளில் குறிப்பிடத்தக்க ஒருவராக இருக்கிறார் ஸ்மிருதி மந்தனா.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் துணை கேப்டனும் ஆவார். இவரை பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

ஒரு அணிக்கான மொத்த தொகையே 12 கோடி தான் என்னும் நிலையில் ஸ்மிருதி மந்தனாக்கு மட்டுமே 3.4 கோடி கொடுக்கப்பட்டதை வைத்து இவரது மதிப்பை நாம் தெரிந்துகொள்ளலாம்.

அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஆஷ்லீக் கார்ட்னர் உள்ளார். இவரை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியது.

மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பவுலரான நடாலி ஸ்கிவர் இருக்கிறார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.

அடுத்தடுத்த இடங்களில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா மற்றும் பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் உள்ளனர். இவர்களை முறையே உ.பி வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் எடுத்திருந்தன.

இந்திய கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் 1.8 கோடிக்கு மும்பை அணியால் எடுத்துக்கொள்ளப்பட்டார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?