கொரோனா Twitter
உலகம்

வட கொரியா கொரோனா - இதுதான் இன்றைய நிலை!

NewsSense Editorial Team

முழு உலகத்தையும் உலுக்கிய கொரோனா வைரஸ் இப்போது வடகொரியாவையும் பதம் பார்க்கத் துவங்கியுள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்ததுக் கொண்டிருக்கும் வேளையில், வடகொரியா போதிய மருத்துவ வசதி இல்லாமல் திண்டாடுகிறது. அங்கு கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூலிகை கசாயத்தையும், இஞ்சி தேநீரையும் பயன்படுத்தும்படி, ரோடொங் சின்முன் என்ற அந்நாட்டு ஆளுங்கட்சி செய்தித்தாள் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

வடகொரியா தொடர்ந்து மற்ற நாடுகளின் மருத்துவ உதவியை நிராகரித்து வந்த நிலையில், தங்களுக்கு உதவும் படி சீனாவுக்குக் கோரிக்கை வைத்து மூன்று விமானங்களை அனுப்பியுள்ளது.

அந்த நாட்டில் தற்போது வழக்கத்திலிருக்கும் தடுப்பு நடவடிக்கைகளான சூடான தேநீர் பருகுவதும், உப்பைக் கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்புளித்தலும் தற்காலிகமான தீர்வைக் கொடுத்தாலும் அவை கொரோனாவுக்கான நிரந்தர தீர்வோ முழுமையான சிகிச்சை முறையோ கிடையாது.

டன் கணக்கில் உப்பு மூட்டைகள் பியோங்கியங்கிற்கு அப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் கிருமிநாசினி ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

Kim Jong-un

இப்புயுரோபென் அமாக்சிலின் போன்ற வலிநிவாரணிகளை உபயோகிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற மாத்திரைகள் சாதாரண காய்ச்சல் சளியைத் தடுக்குமே அன்றி கொரோனவை தடுக்கவோ அல்லது அதிலிருந்து மீண்டு வரவோ உதவாது.

ஆய்வுக்கூடங்களின் அறிக்கைகளில் தொற்றின் வேகம் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டாலும் கள நிலவரம் வேறாக இருக்கின்றது.

வடகொரியாவின் சுகாதாரத்துறை கிராமங்கள் வரை மருத்துவக்கூடங்களை அமைத்து, அனைத்து மக்களும் சிகிச்சை பெறக் கதவுகளைத் திறந்துள்ளது. ஏற்கனவே வறட்சியின் காரணமாக அந்நாட்டு பொருளாதாரம் மந்தமாக உள்ள நிலையில் தொற்று மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வருடம் வடகொரியா சீனாவில் தயாரிக்கப்பட்ட மூன்று மில்லியன் தடுப்பூசிகளையும், தென்கொரியாவின் மருத்துவ உதவிகளையும் ஏற்காமல் எவ்வித பதிப்பும் இன்றி மௌனம் காத்தது. இதனால் வடகொரியாவில் பெருப்பாலான மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத நிலையில் இப்போது மருத்துவ உபகரணங்கள், மற்றும் போதிய தடுப்பூசிகளை வாங்கச் சீனாவிற்கு தன் மூன்று விமானங்களை அனுப்பியுள்ளது.


வடகொரியா மீண்டுவர நாங்கள் கரம் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளது சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?