இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க NewsSense
உலகம்

இலங்கை இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உரையில் இடம்பெற்றுள்ள 7 விஷயங்கள்

NewsSense Editorial Team

இலங்கையில் தமது ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டத்தை மீள அமல்படுத்துவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டு வருவதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இவ்வாறாக குறிப்பிட்டு உள்ளார்.

இலங்கை

இலங்கை அதிபர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய தகவல்களின் தொகுப்பு இதோ.

1. அரசியல் அமைப்பின் 19வது திருத்தத்தை மீண்டும் முழுமையாக அமல்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கிறேன். அதற்காக நாடாளுமன்றத்திற்கு சட்டத்தை கொண்டு வருவதற்கான பின்புலத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை முயல்கிறேன்.

2. நாட்டின் சட்ட ஒழுங்கை உறுதிபடுத்துவதற்கு உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

3. இலங்கை அரசியலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இடைகால அதிபராக பதவி வகிக்கும் இந்த குறுகிய காலத்திற்குள், சில முக்கிய மாற்றங்களை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறேன்.

4. ஜனநாயகத்தை மூழ்கடித்து, பாசிசவாத கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை தீக்கிரையாக்கும் குழுக்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவத்தின் துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்களை இந்த குழுக்களே சூறையாடின. ராணுவத்தின் 24 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். உண்மையான போராட்டக்காரர்கள் இவ்வாறு செயற்பட மாட்டார்கள்.

5.அமைதி வழி போராட்டத்தை 100 வீதம் ஏற்றுக் கொள்கிறேன். எனினும், சிலர் வன்முறைகளை தோற்றுவிக்க முயற்சி எடுக்கின்றனர். எதிர்வரும் வாரம் புதிய அதிபர் தெரிவின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க சிலர் முயற்சித்து வருவதாக அறிகிறேன். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் பின்புலத்தை நான் ஏற்படுத்திக் கொடுப்பேன். அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கு நாம் இடமளிக்க போவதில்லை.

6. ஜனநாயகத்தை மூழ்கடித்து, பாசிசவாத கொள்கைகளின் அடிப்படையில் நாட்டை தீக்கிரையாக்கும் குழுக்கள் இருக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் ராணுவத்தின் துப்பாக்கிகள், துப்பாக்கி தோட்டாக்களை இந்த குழுக்களே சூறையாடின. ராணுவத்தின் 24 உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமாக இருக்கின்றனர். உண்மையான போராட்டக்காரர்கள் இவ்வாறு செயற்பட மாட்டார்கள்.

7. உண்மையான போராட்டக்காரர்களுடன் இணைந்து, ஜனநாயகம் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். அரசியலமைப்பை மீறிய செயற்பாடுகளுக்கு நான் இடமளிக்க போவதில்லை. ஆதரவு வழங்க போவதில்லை. அரசியலமைப்புக்கு வெளியில் செயற்பட மாட்டேன்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?