Love Canva
ஹெல்த்

காதல், காமம், கொஞ்சம் உளவியல் : உடலுறவுக்கு பின் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - 24

NewsSense Editorial Team

செக்ஸுக்கு முன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், செக்ஸூக்கு பின்னர் எப்படி நடந்துகொள்வது நல்லது எனக் காமச்சூத்திரம் சொல்லித்தருகிறது.

பொதுவாக உறவு முடிந்ததும் களைப்பில் உள்ள ஆண், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும். அதோடு உறவில் இணைந்திருந்த பெண்ணைக் கட்டி அணைத்து ஆசையோடு உணவு ஊட்டுவது உறவை ஆழமாக்கும் எனக் காமச்சூத்திரம் சொல்கிறது.

மாம்பழம், சப்போட்டா, திராட்சை போன்ற பழங்கள், பழச்சாறுகள் போன்றவை எனர்ஜி தரும். களைப்பை நீக்கும். இவை தாம்பத்திய உறவு முடிந்த பின்னர் ஆணும் பெண்ணும் சாப்பிட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது. உடலுறவால் நாம் நிறையச் சக்தியைச் செலவிடுகிறோம் என நவீன அறிவியல் கணக்கிட்டிருக்கிறது. இதே அளவு கலோரியை எரிக்க ஆணும் பெண்ணும் தலா 200 கலோரியை எரிக்க நடைப்பயிற்சி செய்ய வேண்டும் அல்லது ஜிம்முக்கு செல்ல வேண்டும். ஆனால், தாம்பத்திய உறவில் அதே அளவு கலோரியை குறைந்த நேரத்தில் உடல் இழப்பதால், உடனே களைப்பாகிவிடுவோம். அந்தக் களைப்பை போக்கத்தான் சக்தி தரும் பானங்களையோ, உணவையோ எடுத்துக்கொள்ளச் சொல்லப்படுகிறது.

Love

பொதுவாக உறவு முடிந்ததும் களைப்பில் உள்ள ஆண், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், உறவில் தன்னுடன் இருந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து உணவு ஊட்டுவது முக்கியம் என வாத்ஸாயனர் காமச்சூத்திரத்தில் சொல்கிறார். இப்படிச் செய்தால்தான் அந்தப் பெண் பாதுகாப்பாக உணர்வாள். இல்லாவிட்டால் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு என்னை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டான். காரியம் முடிந்ததும் ஒதுங்கி விட்டான் என நினைக்கக்கூடும் என்கிறார்.

கணவன், உறவுக்குப் பிறகு அக்கறை காட்டுவது மிக அவசியம். இந்த உணர்வே பெண்ணுக்கு ஆசையைக் கொடுக்கும். பாதுகாப்பைத் தரும். உறவும் ஆழமாகும். பெரும்பாலும் ஆண்கள் தங்கள் மனைவியை ஒரு தூக்க மாத்திரையாகத்தான் பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு உண்டு.

உறவுக்கு முந்தைய விளையாட்டுகள் முக்கியம் எனப் பல நூல்களும் மேற்கத்திய செக்ஸ் அறிஞர்களும் சொல்கிறார்கள். ஆனால், உறவுக்குப் பிறகு எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனக் காமச்சூத்திரம் மட்டுமே எடுத்துரைக்கிறது.

Love,Lust and Pschology

உறவுக்குப் பிறகு ரிலாக்ஸாக, ரசனைக்குரிய விஷயங்களைப் பேசுவதும் அவசியம். பழங்களோ, பழச்சாறோ குடிப்பது, தன் துணையையும் குடிக்க வைப்பதும் முக்கியம்.

உறவுக்கு முன்பும் முடிந்த பிறகும் வாசனைத் திரவியங்கள், பூக்கள் பானங்கள் எல்லாம் பயன்படுத்தும்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நெருக்கம் வளர்கிறது. அதேபோல இனிமையாகப் பேசுவது, ஆண் காட்டும் அக்கறை போன்றவற்றால் அன்பு கூடுகிறது. இருவர் மனதிலும் வெளிப்படும் காதல் உணர்வாலும், இறுகத் தழுவி அன்பைப் பரிமாறிக் கொள்வதாலும் ஊடலும் பொய் கோபமும் ரசனையும் இனிமையான பொழுதாகக் கழிப்பதும் அங்கு சந்தோஷம் வளரச் செய்கிறது.

ஒருவரால் இன்னொருவர் திருப்தியை அனுபவிக்கின்றனர். ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருக்கும் அன்பு, காதல் கண்களில் தெரியும். பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து பேசலாம். முதன் முதலில் பார்த்துக்கொண்ட போது வந்த ஈர்ப்பு. இடையில் ஊடலால் பிரிந்திருந்த போது அடைந்த வேதனை திரும்பவும் சேர்கையில் கிடைத்த ஆனந்தம் என இன்பம் கிளர்ந்தெழும் விஷயங்களை உறவுக்குப் பின்னர்ப் பேசுவது முக்கியம்.

உறவுகொள்ளும் சூழலைப் பொறுத்து காம உறவை சில வகைகளாகப் பிரிக்கலாம்.

முதலாக, பார்த்துக்கொண்ட நாளிலிருந்து ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒருவர் மீது இன்னொருவர் வைத்திருக்கும் அன்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது. குறுக்கிட்ட தடைகளைத் தாண்டி பெரும் சிரமத்துக்குப் பிறகு அவர்கள் இணையும்போதோ அல்லது இருவரில் யாரோ ஒருவர் தொலைதூரப் பயணம் போய்த் திரும்பி வந்ததாக இருந்தாலோ அல்லது ஏதோ காரணத்தால் இருவருக்கும் சண்டை வந்து பல நாட்கள் பேசாமல் இருந்து கோபம் தீர்ந்து மீண்டும் இணையும்போதோ அவர்களுக்குள் நடக்கும் தாம்பத்திய உறவு, ராகவந்தம் எனப்படுகிறது. இதன் அர்த்தம், காதல் நிறைந்த உறவு.

  • தொடரும்கா

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?